* உள்ளத்தில் அன்பு இல்லாமல் இன்பம் உண்டாகாது. அன்பே வாழ்வின் ஆதார சக்தி. * கடவுள் என்னும் ஒன்று மட்டுமே உண்மை. உயிர்கள் எல்லாம் அதன் பிம்பங்களே. * கவலை, பயத்திற்கு இரையாக வேண்டாம். தெய்வத்தை நம்பி உழைப்பில் ஈடுபடுங்கள். * அறிவிலும், செயலிலும் தெய்வத் தன்மையை வெளிப்படுத்தும் முயற்சியில் மனிதன் ஈடுபட வேண்டும். * உலகம் வியக்கும் விதத்தில் நன்மை கைகூட விரும்பினால், அதற்கு பக்தி ஒன்றே வழி. * எல்லா சாஸ்திரங்களும் ஒரே உண்மையைத் தான் சொல்கின்றன. ஆனால் அனைவருக்கும் ஒரே சாஸ்திரம் பொருந்தாது. * தியானப்பயிற்சியால் மனதில் நல்ல சிந்தனை படிப்படியாக வளரும். தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனதை விரும்பியபடி மாற்றும் வலிமை அதற்குண்டு. * அன்பை விட சிறந்த குணம் வேறில்லை. அன்புள்ளம் அனைவரையும் அரவணைத்து மகிழும். * தர்மம் என்னும் ஒன்றை தவிர மற்ற உலக விஷயம் அத்தனையும் பொய்யானதே. * நன்மை இதுவென்று அறிந்தும் கூட, தீமையை உதறும் வலிமையின்றி மனிதன் தத்தளிக்கிறான். * உங்களை நீங்களே திருத்திக் கொள்வதில் தயக்கம் கொள்ளக் கூடாது. * ஊர் வாயை மூடும் உலை மூடி ஒன்று இருக்கிறது. அதன் பெயர் காலம். * நீதி வழியில் மக்களை வாழச் செய்யும் கடமை அரசாங்க த்திற்கு இருக்கிறது. * உள்ளத்தில் நேர்மை, தைரியம் இருந்தால் செல்லும் பாதை நேரானதாக இருக்கும். * ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. நடைமுறைக்கு பொருந் தாததை விட்டு அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டும். * எப்போதும் பாடுபடு. உழைத்து வாழ்வதில் தான் சுகமிருக்கிறது. உழைக்கும் இடத்தில் வறுமை, நோய்க்கு இடமிருக்காது. * தனக்கும், பிறருக்கும் துன்பம் தருவது பாவம். தனக்கும், பிறருக்கும் இன்பம் தருவது புண்ணியம். * மனதால் பிறருக்கு தீங்கு நினைத்தாலும் குற்றமே. அதற்குரிய தண்டனையையும் அனுபவிக்க நேரிடும். * எங்கும், எப்போதும் மனிதன் நேர்மையை பின்பற்றி வாழ வேண்டும். * அணுவளவும் பிறரை ஏமாற்றுவதில்லை என்னும் உறுதி இருந்தால் மனிதன் கடவுளுக்கு நிகராவான். * எந்த செயலுக்கும் காலம் ஒத்து நின்றால் ஒழிய அதனை நிறைவேற்றும் சக்தி மனிதனுக்கு கிடையாது. * எல்லா நன்மைக்கும் தாயாக இருப்பது துணிவு. கல்வி, செல்வம், வீரம் அனைத்தும் துணிவால் பெற முடியும். * படிப்படியான வளர்ச்சி என்றும் நிலைத்திருக்கும். வேகமான வளர்ச்சி, சென்ற வேகத்தில் கீழே தள்ளி விடும். * பணக்காரன் சமத்துவ எண்ணத்துடன் இருந்தால் உலகமே சீர் பெறும். * உண்மையை உயிராக மதித்துப் போற்று. உண்மையான வாக்கே அருள் வாக்கு என்று சொல்லப்படும். பண்படுத்துகிறார் பாரதியார்