மேலூர்: மேலூர் அருகே கீழையூரில் சூரைக்கருப்ப சுவாமியின் 32ம் ஆண்டுதிருவிழாவை முன்னிட்டு பாலாபிஷேகம் நடந்தது. கிராமத்தை சேர்ந்த பார்த்தசாரதி 13 கிலோ வெள்ளி கவசம் வழங்கினார். இக்கவசம் கிராமத்தார்கள் பொறுப்பில் பராமரிக்கப்பட்டு விழாக்காலங்களில் அணிவிக்க முடிவு செய்யப்பட்டது.