பதிவு செய்த நாள்
22
ஜூலை
2018
11:07
சென்னிமலை: சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா, சென்னிமலையில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. சைவ சமய குரவர்களில் ஒருவரான, சுந்தர மூர்த்தி நாயனார், திருமணம் செய்ய முயன்ற போது, சிவபெருமான் கிழவன் வேடம் தரித்து சென்று தடுத்தார். சுந்தரரின் பிறவி நோக்கம், இறைவனை புகழ்ந்து பாடுவது என்பதை உணர்த்தி, சிவபெருமான் தடுத்தாட்கொண்டார். அதன்பின், பல கோவில்களுக்கு சென்று, சிவபெருமானை பாடியுள்ளார். திருமணத்தை தடுத்த சிவபெருமானே, இரண்டு பெண்களை சுந்தரருக்கு திருமணம் செய்து வைத்தார். பன்னிரு திருமுறைகள் மற்றும் தேவாரத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சிவபெரு மான் மீது, 38 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். தென்னாட்டில் சைவம் தழைத்தோங்க செய்த நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா, சென்னிமலை டவுன், கைலாசநாதர் கோவிலில் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவர் புறப்பாடு நடந்தது. விழாவுக்கு முன்னதாக தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.