பதிவு செய்த நாள்
23
ஜூலை
2018
11:07
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கன்யா பூஜை நேற்றுமுன்தினம் நடந்தது. விழாவையொட்டி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையும் நடந்தது. தொடர்ந்து, சங்கல்ப பூஜை நடந்தது.பின்னர் மாலை, 5:45 மணிக்கு, கன்யா பூஜை நடந்தது. அதில், இரண்டு வயது முதல், 10 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு நலங்கு, சவுபாக்கிய திரவியங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், குழந்தைகளுடன் பெற்றோர் ஆர்வமாக பங்கேற்றனர். மேலும், கோவிலில், ஆடி மாதத்தையொட்டி, வரும், 5ம் தேதி ஆடிக்கிருத்திகை பூஜை, 13ம் தேதி, திருவாடிப்பூரம், 14ம் தேதி, நாக சதுர்த்தி, செப்., 2ம் தேதி கோகுலாஷ்டமி விழாவும் நடக்கிறது.