பதிவு செய்த நாள்
30
ஜூலை
2018
12:07
நகரி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடந்த தீமிதி விழாவில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி தீமிதித்தனர். சித்துார் மாவட்டம், சிந்தலப்பட்டடை கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், 20ம் தேதி, கொடியேற்றத்துடன் தீமிதி விழா துவங்கியது. நேற்று காலை, 8:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். தொடர்ந்து, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வாண வேடிக்கைகளுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.