Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஞ்சநேயர் கோயிலில் சீதா ராமர் உலா ... திருத்தணி முருகன் கோவிலுக்கு 2 நாட்கள் வாகனம் செல்ல தடை திருத்தணி முருகன் கோவிலுக்கு 2 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குல்லுார் சிவன் கோவிலில் தமிழ் கல்வெட்டு கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
குல்லுார் சிவன் கோவிலில் தமிழ் கல்வெட்டு கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

31 மார்
2026
11:03

ஆந்திர மாநிலம், குல்லுாரில் உள்ள சிவன் கோவில் பராமரிப்பு பணியின்போது, தமிழ் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.


ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டம், கலுவோயா மண்டலத்தில் உள்ளது குல்லுார். இங்குள்ள, 10 – 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மல்லிநாத தேவர் எனும் சிவன் கோவிலில், சமீபத்தில் புனரமைப்பு பணிகள் நடந்தன. இந்த கோவில், சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பாண்டியர் காலம் வரை தமிழர்களின் பராமரிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவில் பராமரிப்பு பணியின்போது, ஒரு பலகை கல்வெட்டில் எழுத்துகள் இருப்பதை அறிந்து, அதை தனியாக எடுத்து வைத்தனர். அதன் புகைப்படத்தை, அவ்வூரைச் சேர்ந்த நலகண்ட்லா நரேந்திர பாபு என்பவர், மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவிற்கு அனுப்பினார்.


இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவு இயக்குநர் முனிரத்தினம் கூறியதாவது: இந்த கல்வெட்டு, 1266ல் எழுதப்பட்டுள்ளது. அப்போது இருந்த மன்னரின் பெயர் தெளிவாக இல்லை. அப்போது, இந்த ஊர் குருவாயலுார் என்ற பெயரில் இருந்துள்ளதை, கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது. இந்த கோவிலில் நிரந்தரமாக இரட்டை அந்தி விளக்குகள் ஏற்றவும், சிவபெருமானின் பூஜைக்கான உணவு படையல் இடவும், குருவாயலுார் துறைமுகத்தில் உள்ள சில மாதைகள், வரியில்லாமல் தானமாக வழங்கப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.   – நமது நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar