Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுந்தரவாண்டி சுந்தர விநாயகர் கோவில் ... மாதா ஜகத்ஜனனி கோவிலில்மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் மின்விளக்கின்றி பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
12:01

செஞ்சி :செஞ்சிக்கோட்டை பூவாத்தம்மன், செல்லியம்மன் கோவில்களில் மின் விளக்கின்றி பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். செஞ்சி கோட்டை கிருஷ்ணகிரி மலையடிவாரத்தில் பூவாத்தம்மன் கோவிலும், வேலூர் கேட் அருகே செல்லியம்மன் கோவிலும் உள் ளது. இக் கோவில்களுக்கு எல்லா நாட்களிலும் பக்தர்கள் சென்று வருகின்றனர். ஒவ்வொரு பவுர்ணமியன்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். அன்று இரவும் ஏரா ளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக பூவாத்தம்மன் கோவிலுக்கு செல்லும் அகழி பாதையிலும், திருவண்ணாமலை ரோட்டிலும் மின் விளக்குகளை அமைத்திருந்தனர். இதற்கான மின் ஒயர்களை சில இடங்களில் தரையில் பதித்திருந்தனர். கடந்தாண்டு மத்தியில் கிருஷ்ணகிரி கோட்டை அகழி சுவர்களை சீரமைத்த போது இந்த மின் ஒயர்கள் சேதமடைந்தன. இதன் பிறகு இப்பகுதியில் மின் விளக்குகள் எரிவது தடை பட்டது. கம்பங்களில் இருந்த மின் விளக்குகளையும் குரங்குகள் கீழே தள்ளி விட்டன. ஆங்காங்கே மின் இணைப்புகளும் பாதுகாப்பு இல்லாமல் திறந்த படி உள்ளன. இதை சரி செய்து தருமாறு கோவில் நிர்வாகிகள் செஞ்சி பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் மனு கொடுத்தனர். இருந்தும் பல மாதங்களாக சரி செய்யாமல் உள்ளனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக பேரூராட்சி நிர்வாகத்தினர் மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar