Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாதா ஜகத்ஜனனி கோவிலில்மஹா ... பழநி தைப்பூச விழா நாளை துவக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு! பழநி தைப்பூச விழா நாளை துவக்கம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்ணேஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
12:01

காவேரிப்பட்டணம்:காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபுரம், அம்மன் விமானம் ஆகியவை திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிந்து நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு கணபதி ஹோமம், மஹாலட்சமி ஹோமம், கோ பூஜை, தீபாராதனையும், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, ரட்ஷாபந்தனம், முதல் கால யாகபூஜையும், இரவு 9 மணிக்கு வேதநாயகி அம்மன் விமானத்தில் கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், நாடி சந்தானமும், மஹா பூர்ணாஹதி தீபாராதனையும், கடம் புறப்பாடும் நடந்தது. 8.50 மணிக்கு ராஜகோபுரம், அம்மன் விமானம், மூலவர் விமானம் ஆகியவற்றில் உள்ள கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் திருச்சி சண்முகம், தீர்த்தமலை கார்த்திகேய சிவம் ஆகியோர் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர்.தொடர்ந்து மஹா தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று (ஜன., 30) 48 நாட்களுக்கு மண்டல பூஜையும் நடக்கிறது. விழாவில் உள்ளாட்சி துறை அமைச்சர் முனுசாமி, கலெக்டர் மகேஸ்வரன், எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, யூனியன் சேர்மன் ஜமுனா கிருஷ்ணன், டவுன் பஞ்சாயத்து சேர்மன் வாசுதேவன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார், துணைசேர்மன் வேல்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை தொழிலதிபர்கள் சுப்பிரமணியன், சுவாமிநாதன், உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் முருகன், கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar