பதிவு செய்த நாள்
16
ஆக
2018
01:08
புதுச்சேரி: அரவிந்தரின் 146வது பிறந்த தினத்தையொட்டி, ஆசிரமத்தில் அவர் தங்கியிருந்த அறையை நேற்று ஏராளமானோர் தரிசனம் செய்தனர். புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில், அரவிந்தரின் 146 பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. அதிகாலை 4.00 மணிக்கு ஆசிரமம் திறக்கப்பட்டு, தன்னார்வலர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பின், அரவிந்தர் அறை தரிசனத்திற்கான நுழைவுச்சீட்டு, ஆசிரமம் அருகிலுள்ள தபால் நிலைய வாயிலில் வழங்கப்பட்டது.
அனுமதி சீட்டு பெற்றவர்கள் காலை 6.00 மணி முதல், ஆசிரமம் பின்புறம் உள்ள செயின்ட் ழீல் வீதியில் இருக்கும் சிறப்பு வாயில் வழியாக ஆசிரமத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆசிரமத்தின் மேல் தளத்தில், அரவிந்தர் தங்கியிருந்த அறையை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிறகு, அன்னை சமாதியில் தரிசனம் மற்றும் தியானம் செய்தனர். மாலையில், லா தெ லொரீஸ்தோன் வீதி, செயின்ட் லுாயி வீதி சந்திப்பில் உள்ள ஆசிரம விளையாட்டு மைதானத்தில், 6 முதல் 80 வயது வரையிலான ஆசிரமவாசிகள் பபங்கேற்ற, பேண்டு இசையுடன் கூடிய அணிவகுப்பு நடந்தது.