வடலூர் வள்ளலார் கோயில் திருப்பணி செய்த பணியாட்களுக்கு சம்பளம் கொடுக்க தன் நகைகளை 3500 ரூபாய்க்கு அடகு வைத்தார். இந்நிலையில் வடலூருக்கு வந்த ராஜமாணிக்கம் என்பவரிடம், “உங்கள் ஊரில் எனது சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்து திருப்பணிக்கு உதவுங்கள்” என வாரியார் கேட்க அவரும் சம்மதித்தார். ஆனால் அன்று மழை பெய்யவே தென்னங் கீற்றுகளை பரப்பி அதில் அமர்ந்து மக்கள் வாரியார் பேச்சைக் கேட்டனர். நிகழ்ச்சி முடிந்ததும், பழங்கள், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து வாரியாரிடம் கொடுத்தார் ராஜமாணிக்கம். வழக்கமாக ஐநூறு ரூபாய் சன்மானம் பெறும் வாரியார், மனதிற்குள் ஆயிரமாகப் பெற வேண்டும் என எண்ணியிருந்தார். ஆனால் தட்டில் நூறு ரூபாய் நோட்டுகள் கத்தையாக இருந்தன. எண்ணிப் பார்த்த போது வாரியாருக்கு ஆச்சர்யம் தாளவில்லை. சரியாக 3500 ரூபாய் இருந்தது. அடகு வைத்த அதே தொகை சன்மானமாக கிடைத்தது வள்ளலாரின் கருணை என்பதை அறிந்து மகிழ்ந்தார்.