● யாரை புறம் பேசினீர்களோ, அவர்கள் மன்னிக்காதவரை இறைவனும் உங்களை மன்னிக்க மாட்டான். ● சமையல் செய்பவரை அருகில் அமரவைத்து உண்ணச் சொல்லுங்கள். ஏனெனில் நெருப்பில் கிடந்து உங்களுக்காக உணவு சமைத்து தருகிறார் அல்லவா? ● வாய்மூடி மவுனம் காக்கும் வரை தான் நாக்கின் கற்பும் காக்கப்படும். ● எவ்வளவு நேரம் மவுனமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு புண்ணியம் உங்களைச் சேரும். ● இறைவனுக்கான கடமைகளை நிறைவேற்றும் போது, எத்தகைய துன்பம் வந்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள்.