ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் கோயில் உண்டியல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2018 03:10
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் உண்டி யல் திறப்பு நடந்தது. புரட்டாசி 3ம் சனியன்று பல்வேறு உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை, செயல்அலுவலர் இளங்கோவன் தலைமையில் நேற்று முன்தினம்(அக்., 7ல்) எண்ணப்பட்டது. ரூ. 8 லட்சத்து 56 ஆயிரத்து 547 காணிக்கையாக வசூலானது. புரட்டாசி 2ம் சனியன்று ரூ. 3 லட்சத்து 94 ஆயிரத்து 574 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந் தனர். உண்டியல் எண்ணும் பணியில் கோயில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.