பதிவு செய்த நாள்
09
அக்
2018
04:10
ஊட்டி:ஊட்டி, கூடலூர் பகுதிகளில் குருபெயர்ச்சி; சனிபெயர்ச்சி; அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.ஊட்டி காந்தள் காசி விஸ்வநாதர் கோவிலில், குருபகவானுக்கு சிறப்பு யாக பூஜையையொட்டி காலை, 9:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, யாக பூஜை, அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு பரிகாரப் பூஜை நடந்தது. தொடர்ந்து, இரு நாட்கள் சனிபெயர்ச்சி; அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தட்சிணாமூர்த்தி மடாலயம், காசி விஸ்வநாத சுவாமி வழிபாட்டு அறக்கட்டளை, காசி விஸ்வநாத சுவாமி சேவா சங்கம், காசி விஸ்வநாதசுவாமி கோவில் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.
* கூடலூர் விநாயகர் கோவிலில் குருபெயர்ச்சி; சனிபெயர்ச்சி சிறப்பு பூஜைகள் விழா நடந்தது. காலை 8:30 மணிக்கு கணபதி ஹோமம், 10:30 மணிக்கு சிறப்பு ஹோமம் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, தட்சிணாமூர்த்தி, நவகிரகங்களுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* ஆமை குளம் விநாயகர் கோவிலில், காலை, 8:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன், குரு பெயர்ச்சி பூஜை நடந்தது. சிறப்பு ஹோமம் பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று தங்கள் ராசிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.