Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ... மாசாணியம்மன் கோவிலில் குண்டம் விழா கோலாகலம் மாசாணியம்மன் கோவிலில் குண்டம் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன நேரம் மாற்றம் செய்ய முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2012
11:02

நகரி : திருப்பதியில் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, இலவச தரிசனத்தில் முன்னுரிமை அளிக்க, தேவஸ்தான அதிகாரிகள் தரிசன நேரங்களில் மாற்றம் செய்ய முடிவு மேற்கொண்டுள்ளனர். பாத யாத்திரையாக வரும் பக்தர்கள், இலவச தரிசனத்தை துரிதமாக செய்வதற்கு வசதியாக, தற்போதுள்ள 300 ரூபாய் சிறப்பு நுழைவு  தரிசன நேரம், வரும், 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. வார நாட்களில் சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் அதிகாலை, 4 மணியிலிருந்து, 5 மணி வரை வழங்கப்பட்டு வந்த, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை நிறுத்தம் செய்து விட்டு, அந்த நேரங்களில் பாத யாத்திரையாக வரும் பக்தர்களை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

லகு தரிசனம் :  இரவு நேரங்களில் 500 ரூபாய் வி.ஐ.பி., தரிசனம் உள்ள திங்கள், வியாழக்கிழமைகளில் மாலை, 5 மணி வரையிலும் அருகிலிருந்து தரிசிக்கும் (லகு தரிசனம்) நடைமுறை அமல்படுத்தப்படும். செவ்வாய், புதன் கிழமைகளில் வழக்கம் போல் பிற்பகல், 2 மணி வரையில், சிறப்பு தரிசன பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இரவில் வி.ஐ.பி., தரிசனம் இல்லாத வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் இரவு, 9 மணி வரை, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக் கிழமைகளில், காலை நேரத்தில் மூலவருக்கு அபிஷேகம் நடக்கும்போது, மூலவரைக் கண்குளிர காணமுடியவில்லை என் பக்தர்களிடமிருந்து புகார் வருகின்றன.
இதனால் இலவச தரிசன பக்தர்களுக்கு அனுமதியை நிறுத்தவும் ஆலோசிகப்பட்டு வருகிறது. தோமாலை, அர்ச்சனை சேவை நேரங்களில் இலவச தரிசன பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாதம், 15ம் தேதி முதல் வார நாட்களில் மாற்றம் செய்யப்பட உள்ள, 300 ரூபாய் சிறப்பு தரிசன நேரம் கீழ்கண்டபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை காலை, 7 மணி முதல் இரவு, 9 மணி வரை,  திங்கள் அன்று காலை, 7 மணி முதல் மாலை, 5 மணி வரை, செவ்வாய் காலை, 8 மணி முதல் பிற்பகல், 2 மணி வரை, புதன் காலை, 9 மணி முதல் பிற்பகல், 2 மணி வரை, வியாழன் காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை, வெள்ளியன்று காலை, 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை, சனியன்று காலை, 7 மணி முதல் இரவு, 9 மணி வரை சிறப்பு தரிசன டிக்கெட் பெறும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்கள். இத்தகவலை, தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வெள்ளைக்கிணறுவில் உள்ள பூ மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அடி அளந்து ... மேலும்
 
temple news
கருமததம்பட்டி; கே.ராயர்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவின்தேர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar