தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனித் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். மதுரை, தேனி, திண்டுக்கல், விருது நகர், ராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள்.
பக்தர்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும், அக்னிசட்டி எடுத்தும், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வருதல், மா விளக்கு, கண்மலர் காணிக்கையாக்குதல், ஆயிரம் கண் பானை, அலகு குத்துதல், போன்ற நேர்த்தி கடன் செலுத்துவர். 10 நாட்கள் நடைபெறும். தாயமங்கலம் பங்குனி திருவிழா வருகிற மார்ச் 29ல் காலை சிறப்பு ஹோமம், பூஜைகளுடன் நடந்த பின்னர், இரவு 10:00 மணிக்கு கோவில் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கும். விழாவின் போது, அம்மன் தினமும் சிம்மம், குதிரை, காமதேனு, அன்ன,பூத, வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின், முக்கிய நிகழ்ச்சியான, பொங்கல் விழா ஏப்.5ம் தேதியும், 6ம் தேதி தேரோட்டமும், பால்குடம் 7ம் தேதியும் நடைபெறும். அதனை தொடர்ந்து, 8ம் தேதி தீர்த்தவாரி உற் ஸவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.