Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 60. பூமியின் வரலாறு
பூமியின் வரலாறு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2018
01:10

இன்று நாம் வசிக்கும் இந்த உலகம் ஒரு காலத்தில் இப்பொழுது இருப்பதைப் போல இருந்ததில்லை

அப்பொழுது அண்டவெளி எங்கும் ஒரே இருள். ஒரே அமைதி. ஆதியில் அணுவுக்கு அணுவாய் இருக்கும் பரமாணுக்களான எலக்ட்ரான், புரோட்டான், நீயூட்ரான் போன்றவைகள் அண்டவெளியில் செயலற்ற நிலையில் இருந்தன. அப்பொழுது அண்டவெளி முழுவதும் ஊடுருவி இருந்த மகாசக்தியானது ஸ்ரீர்ய்ஸ்ங்ழ்ள்ஹற்ண்ர்ய் ர்ச் ங்ய்ங்ழ்ஞ்ஹ் தான் இயக்கும் சக்தியாக மாறி ல்ர்ற்ங்ய்ற்ண்ஹப் ச்ர்ழ்ஸ்ரீங் அண்டவெளி முழுதும் பரவியிருந்த பரமாணுக்களை இயங்கும் சக்தியாக ந்ண்ய்ங்ற்ண்ஸ்ரீ ச்ர்ழ்ஸ்ரீங் மாற்றி செயல்பட வைத்தது. எப்படி காந்தமானது இரும்புத் துகள்கள் பக்கம் வரும்பொழுது அவைகள் சலனமுற்று நகரத் தொடங்குவது போல. அதனால் பரமாணுக்கள் அசைந்து ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒரு அணு என்பது உருவாயிற்று. இப்படி பலவிதங்களில் பலவிதமான அணுக்கள் அண்டவெளியில் உண்டாகி அசைந்துநகரத் தொடங்கின. பலகோடி அணுக்கள் ஒன்று சேர்ந்து கண்ணுக்குப் புலப்படாத தூசிகளாகவும், துகள்களாகவும் அண்டவெளியில் உண்டாயிற்று.

இப்படி உண்டான அணுக்கள் தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கும் பிற பொருட்களைத் தன்பால் ஈர்க்கும் சக்தியினைக் கொண்டதாகவும் இருந்தன. இந்த அண்டத் துகள்கள் தன் ஈர்ப்புச் சக்தியால் பல ஒன்றாகி மிகப் பிரம்மாண்டமான உருவம் கொள்ள ஆரம் பித்தது. இப்படி கோடானு கோடி பொருட்கள் அண்டவெளியில் உருவானது. அவைகளில் மிகப் பெரிய பிரம்மாண்டமான இரண்டு பொருட்கள் ஒன்றுடன் ஒன்று அண்டவெளியில் மோதிவெடித்துச் சிதறியது. அந்த வினாடியில் அண்டவெளியில் மிகவும் சக்தி வாய்ந்த வெப்பம் ட்ங்ஹற் கொண்ட ஒளியும் ப்ண்ஞ்ட்ற் மற்றும் பேராற்றல் கொண்ட ஒலியும் ள்ர்ன்ய்க் உண்டாயிற்று. இந்த நிகழ்வினை மகா வெடிப்பு ஆண்ஞ் க்ஷஹய்ஞ் ற்ட்ங்ர்ழ்ஹ் என்று விஞ்ஞானம் கூறியது.

இப்படி வெடித்துச் சிதறிய பாகங்கள், மையப் பகுதியில் இருந்த பிரகாசமான ஒளியினைச் சுற்றிவர ஆரம்பித்தன. இந்த பிரகாசமான ஒளியினையும், அதீதமான வெப்பத்தையும் கொண்ட மையப் பகுதி சூரியன் என்றாயிற்று. இந்த சூரியன் என்பது வாயுக்களால் ஆன ஒரு நட்சத்திரமாகும்.

சூரியன் மிகவும் பிரம்மாண்டமான உருவம் கொண்டது. அதாவது பூமியைப் போல 10 லட்சம் பூமிகளை இந்த சூரியனில் பொருத்தலாம். சூரியன் அதன் மைய அச்சில் சுழல்கிறது. ஒரு சூரிய சுழற்சி முடிவுடைய 22 ஆண்டுகளாகும். பூமியின் புவி ஈர்ப்பு சக்தியினை விட சூரியனின் ஈர்ப்பு சக்தி 28 மடங்கு அதிகமாகும். அதனால் மற்ற கோள்கள் தன்னை விட்டு விலகிப் போகாமல் வைத்துக் கொண்டது.

நம்முடைய சூரியக் குடும்பத்தில் ஒன்பது கோள்கள் உண்டாகின. மகா வெடிப்பின் போது சிதறிய மிகச் சிறிய பொருட்கள் எல்லாம் விண்கற்களாக மாறி அண்டவெளியில் சுற்றி வர ஆரம்பித்தன.

 பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் புதன், வெள்ளி என்ற இரண்டு கோள்களும், பூமிக்கு வெளிப் புறத்தில் செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், ப்ளூட்டோ என்ற கோள்களும் உண்டாயின. வெள்ளியும், யுரேனசும், தவிர மற்ற கோள்கள் எல்லாம் இடமிருந்து வலமாக நீள்வட்டப் பாதையில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றிவர ஆரம்பித்தன.

சனி, சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் வெறும் வாயுக்களால் ஆனவைகள் ஆகும். புதனும், வெள்ளியும் சூரியனுக்கு வெகு அருகில் உள்ளதால் அவை கொந்தளிப்பான கோள்கள் ஆகும்.

வியாழனின் மையப் பகுதி மட்டும் சிறிது கெட்டியானது. ஒவ்வொரு கோளுக்கும் என்று ஒரு காந்த மண்டலம் உள்ளது. இந்த காந்த மண்டலத்துடன் மின்சார மண்டலமும் உள்ளது.

  இந்த பிரபஞ்சத்தில் பல்வேறுச் செயல்களை இந்த மின்காந்த சக்தியால் தான் நடத்தப் படுகின்றன. ஈதர் உற்ட்ங்ழ் என்ற அண்டவெளி எங்கும் வியாபித்துள்ள பொருளின் அடித்தளத்தில் இருந்து தான் அதனை ஆற்றல்களும் செயல்படுகின்றன. பூமி உண்டான பொழுதே சந்திரனும், பூமியிலிருந்து 3.84 லட்சம் கி.மீ தூரத்தில் உண்டாயிற்று. அது தனிக் கோளாக உருவாக முடியாத நிலையில் அதன் நிறைக்கும், பரிமாணத்திற்கும் ஏற்ப பூமியினைச் சுற்றி வரும் உபகிரகமாக சந்திரன் உருவாயிற்று. இது தன் அச்சில் தன்னைத்தானே, அதே சமயம் பூமியின் சுற்றுப் பாதையில், பூமியுடன் சேர்ந்து அதே வேகத்தில் பயணம் செய்கிறது.

 பூமியின் துணைக்கோளானச் சந்திரன் சூரிய ஒளியினை பூமிக்கு பிரதிபலிக்கும் வெறும் கண்ணாடி போன்றது தான். பூமியானது தன் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. பூமியின் சுழற்சி வேகத்தின் காரணமாக பூமியானது சுருங்கி அதன் மேல் பாகம் சிறிது கடினத் தன்மையினை அடையத் துவங்கியது. அதனால் பூமியானது கமலா ஆரஞ்சுப் பழத்தைப் போல மேலும் கீழும் சிறிது தட்டையான உருண்டை வடிவம் அடைய ஆரம்பித்தது. இப்படி அமைந்தப் பூமியின் மேல்பகுதி என்றும் கீழ்ப்பகுதி தென்பகுதி என்றும் உண்டாயிற்று. இப்படி இரண்டு துருவங்கள் உண்டானதால் பூமியானது ஒரு காந்த மண்டலம் என்று ஆகியது.

அப்போது பூமியின் மீது இருந்த அதீதமான வெப்பத்தின் காரணமாக பூமியில் இருந்த வாயு அணுக்கள் எல்லாம் ஆவி ரூபமாக மேலே சென்றது. பூமி தன்னைத்தானேச் சுற்றிக் கொண்ட சுழற்சியின் வேகம் காரணமாக பூமியினைச் சுற்றி அடர்த்தியாக இருந்த கரியமில வாயும் மற்றும் அண்டவெளியில் இருந்த மற்ற பல வாயுக்களும் சேர்ந்து காற்று மண்டலம் என்பது பூமிக்கு மேல் 10 கி.மீ உயரம வரை உண்டாயிற்று. பூமி சுழல்வதால் காற்று மண்டலமானது பூமியினை விட்டு விலகிப் போகாமல் பூமியைச் சுற்றிப் படர்ந்தன. ஒரு காலக் கட்டத்தில் இரண்டு வெவ்வேறு அணுக்கூறுகள் ஒன்று சேர்ந்து ஒரு நீர் அணுக்கருவாக மாறின.

இப்படி பல கோடிக்கணக்கான நீர் அணுக்கள் ஒன்று சேர்ந்த மழை மேகங்கள் என்ற நிலையினை அடைந்தது. பிறகு நீர் துளிகளாக மாறி மழையாக பூமியாக என்ற நிலையினை அடைந்தது. பிறகு நீர் துளிகளாக மாறி மழையாக பூமியின் மீது பெய்யத் தொடங்கியது.

இப்படித்தான் பூமி உண்டான காலத்தில், பிற்காலத்தில் பூமியில் உண்டாகப் பூம் தாவர இனங்களுக்கும், உயிரினங்களுக்கும் ஆதாரமான தண்ணீர் என்ற ஒன்று உண்டாக்கியது. இப்படிப் பெய்யும் மழையின் நீரானது பூமியினை நெருங்க முடியாதபடி, அதாவது மழை நீரானது பூமியினை நெருங்கும் முன்பே ஆவியாகி விடும் அளவிற்கு பூமியானது கடுமையான நெருப்புக் கோளமாக இருந்தது. மழை நீர் பூமியினை தொடவே பல ஆயிரம் ஆண்டுகள் ஆயிற்று.

இப்படித் தொடர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாகப் பூமி குளிர்ந்து ஒரு கடினத் தன்மையினை அடையலாயிற்று. பூமியின் மேல் ஓட்டின் ஆழம் 40 கிலோ மீட்டர் வரைச் சென்றது. பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் பெய்த மழையின் காரணமாக பூமியின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டும், மீதம் ஒரு பங்கு நிலப்பரப்பாகவும் நீருக்கு மேல் தோன்றியது.

ஒரு வழியாகப் பூமியின் மீது பெய்த மழை நின்றது. இருட்டும் மறைந்தது. சூரியனின் ஒளியும், வெப்பமும் பூமியின் மீது விழுந்தது. அந்தக் காலத்தில் ஆகாயத்தில் இருந்து பூமிக்கு வந்து விழுந்து கொண்டே இருந்த விண்கற்களின் வெடிப்பால் ஏற்பட்ட ஒலிகளும் மற்றும் உலகம் சுற்றுவதால் ஏற்பட்ட ஒலியினையும் தவிர வேறு ஒலிகள் என்பது ஒன்று இல்லாமலே உலகம் முழுவதும் ஒரே நிசப்தமாக இருந்தது.

ஒன்று அசையும்போது அதிலிருந்து ஒரு ஒலியும் உண்டாகும் என்பது இயற்கைக் கோட்பாடு. அந்த ஒலி ஓம் என்று ஒலித்தது என்று ஆன்மீகம் கருதுகிறது. அப்போது பூமியில் மலைத் தொடர்கள், எரிமலைகள், வெந்நீர் ஊற்றுகள், நதிகள் என்று பல உண்டாயிருந்தன. மலைகளில் இருந்து பல நீர் ஓடைகள் தோன்றி சமவெளியில் நதியாகப் பாய்ந்து முடிவில் கடலில் கலந்தன. மலைகளில் உண்டான நதியானது அது வரும் வழியில் உள்ளப் பாதைகளையும் அடித்துக் கொண்டு வரும்போது அவைகள் ஒன்றுடன் ஒன்று மோதிச் சிதறி மணலாகவும், வண்டல் மண்ணாகவும் மாறியது. அதனால் நதியின் ஓரங்களில் விவசாய நிலங்கள் உண்டாயின.

பல எரிமலைகளின் அடியில் உள்ள வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக திரவ நிலையில் இருந்த மக்மா என்ற எரிமலையில் இருந்து வெளியே சீறிப் பாய்ந்தது. இந்த குழம்பானது நான்கு பக்கங்களிலும் ஒழுகி ஓடின. எரிமலையின் சாம்பல்கள் பல கிலோ மீட்டர்கள் தூரம் வரையிலும் சென்றுப் படிந்தன. இந்த எரிமலையின் சாம்பல் விவசாயத்திற்கு ஏற்ற உரமாக மாறியது. அந்தக் காலத்தில் உலகின் பல பாகங்களிலும் அதிக அளவில் எரிமலைகள் இருந்தன. ஆனால் பிற்காலத்தில் அவைகளில் பல வெடித்துச் சிதறி மறைந்து விட்டது.

பூமியின் சுழற்சியின் வேகம் மற்றும் சூரிய வெப்பம் குறைவின் காரணமாகவும் அந்தப் பகுதிகளில் கடுமையான குளிர்ச்சி நிலை ஏற்பட்டு அதனால் அந்தப் பகுதிகளில் இருந்த தண்ணீரானது பனிமலைகளாக உறைந்திருந்தன. பெரும் மழையின் காரணமாக உண்டான தண்ணிரானது பூமியில் மறைந்திருந்த மண்ணின் சத்தை, தாது உப்புகள் போன்றவைகள் கரைத்து நீர்ம நிலையில், தாவர இனங்கள் உண்டாவதற்கு ஏற்ற தயார் நிûலிலயில் பூமியினை வைத்திருந்தது.

சூரிய ஒலியும், வெப்பமும் பூமியின் மீது பட்டவுடன் மண்ணில் நீர்ம நிலையில் கரைந்திருந்த மண்ணின் சத்தில் இருந்து ஒரே இடத்தில் நிலைத்து நின்று வளரக் கூடிய புல், பூண்டுகள் காளான்கள் போன்றவைகளும், நீர்ம நிலையில், தாவர இனங்கள் உண்டாவதற்கு ஏற்றத் தயார் நிலையில் பூமியினை வைத்திருந்தது.

இவைகளே பிற்காலத்தில் ஏக இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லும் இரண்டாம் நிலை உயிரினங்கள் பூமியில் தோன்றி வளர்ச்சி அடைவதற்கு முதல்படியாக அமைந்தது எனலாம். இப்படி நீரில் பாசம் போன்ற எளிய வகைத் தாவர இனத்தில் இருந்து நிலத்தில் மிகப் பெரிய அடர்ந்தக் காடுகள் வரை பல லட்சம் ஆண்டுகளில் உண்டாயின.

இப்படி நீரிலும், நிலத்திலும் முதன் முதலில் தோன்றிய மிகவும் எளிமையான தாவர இனங்கள் சில காலம் வரையில் பூமியில் இருந்து கிடைத்த மண்ணின் சத்தாலும், சூரிய சக்தியாலும் மற்றும் அக்காலத்தில் காற்றில் அதிகமாக நிறைந்திருந்த கரியமில வாயுவையும் எடுத்துக் கொண்டும் வளர்ந்தன.

பிறகு இந்தத் தாவரங்கள் அழிந்து, மக்கி மண்ணில் மறைந்தன. இப்படி மக்கி மறைந்த தாவரங்கள் மறுபடியும் பூமியில் தாவர இனங்கள் தோன்றக் காரணமான மண்ணின் சத்தாக மாறின. இப்படியேச் சுழற்சி முறையில் தாவர இனங்கள் பூமியிலும், நீரிலும், தோன்றி வளர்ந்து மறைந்து எப்போதும் பூமியின் உயிர்ச் சத்தானது மாறாமல் அப்படியே வைத்துக் கொண்டது.

முதலில் விதைகள் என்பது இல்லாமல் முளைத்த மிகச் சிறிய தாவர இனங்கள் பிறகு செடி, கொடிகளாகவும், மரங்களாகவும் வளர்ச்சி அடைந்தது. பூத்து, காய்த்து, கனிந்து, அதில் இருந்து விதைகள் என்பது உண்டாகி, அவைகள் மறுபடியும் நீரிலும், நிலத்திலும் பல கோடித் தாவர இனங்கள் பூமியில் எங்கும் பரவி வளர்ச்சி அடைவதற்கு வேண்டியச் சூழ்நிலையினை உருவாக்கிக் கொடுத்தது.

இந்த காலக் கட்டத்தில் பூமியில் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு வேண்டிய பிராண வாயு உண்டாகி இருக்கவில்லை. அப்போது அதிக அளவு கரியமில வாயுதான் காற்று மண்டலத்தில் இருந்தது. அதனால் தாவர இனங்கள் பகலில் கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு பிராண வாயுவை வெளியிட்டன. இரவில் பிராண வாயுவை எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியிட்டன. இந்த சுழற்சி முறையில் இயற்கையானது பிற்காலத்தில் உண்டாகப் போகும் உயிரினங்களுக்குத் தேவையானப் பிராண வாயுவைச் சரியான விகிதச் சாரத்தில் வைத்துக் கொண்டது.

இந்தவிதமான பூமியானது சுமார் 40,000 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதலில் இந்த உலகமானது சலனமற்று அமைதியாக இருந்தது. இறைவன் சங்கல்பம் கொண்டவுடன் இந்த அணுக்களானது சலனம் அடைந்து உலகம் ஏற்படுவதற்கான மாற்றங்கள் அடையத் தொடங்கின. இந்த உலகம் தோன்றியபோது எழுந்த ஒலியே இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓங்காரம் என்ற ஓம் ஒலியாகும்.

பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று இந்த உலகம் முழுமை அடைவதற்குப் பல காரணங்களை அறிவியல் நமக்குச் சொன்னாலும் அந்த காரணங்களின் ஒழுக்கக் கோட்பாட்டிற்கு ஆதாரமாய் நின்று அவற்றை இயக்குபவனாய் இருப்பவரே அந்த பரம்பொருளான இறைவன் ஆவான். பிரபஞ்சத்தின் தோற்றமும் ஒடுக்கமும் இறைவனின் சங்கல்பம் ஆகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar