திருவனந்தபுரம்: சபரிமலை போராட்டம் தொடர்பாக 250 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், மொத்தம் 1,400 பேரை கைது செய்தனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல பெண்கள் முயற்சி செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பையில் பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் போராட்டத்தின் போது, வாகனங்களை சேதப்படுத்தியதாகவும், பெண்களை தாக்கியதாகவும் நிலக்கல், பம்பை மற்றும் சபரிமலையில் 250க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். மேலும் சந்தேக நபர்களின் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டு உள்ளனர். இதனை அனைத்து மாவட்ட தலைமையகத்திற்கும் அனுப்பி வைத்து அவர்களை அடையாளம் காண சிறப்பு குழுக்களை அமைத்து உள்ளதாக டிஜிபி கூறியுள்ளார். இந்நிலையில், போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக 250க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்தபோலீசார், இதுவரை மொத்தம் 1400 பேரை கைது செய்துள்ளனர்.