பதிவு செய்த நாள்
26
அக்
2018
12:10
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், கே.ஜி. கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய பகுதி களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், மூலவருக்குபாலாபிஷேக உற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம்; காலை, 5:30 மணிக்கு, காகட ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது.
மதியம், 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில், சேஜ் ஆரத்தி நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.