பதிவு செய்த நாள்
26
அக்
2018
12:10
சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கைப்பற்றியதில், 63 சிலைகள் மற்றும் பொருட்களின் தொன்மை குறித்து ஆய்வு செய்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.தமிழகத்தில் நடந்த, சிலை கடத்தல், திருட்டு வழக்குகளை, ஐ.ஜி., பொன் மாணிக்க வேல் தலைமையிலான தனிப்பிரிவு விசாரித்து வருகிறது.ஐகோர்ட்டில் மனுஇந்த தனிப்பிரிவு, பல சிலைகளை கைப்பற்றி உள்ளது.
இந்த சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.மனுவை விசாரித்த, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் தொல்லியல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.
வழக்கு, நேற்று (அக்., 25ல்) விசாரணைக்கு வந்த போது, தொல்லியல் துறை சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல், ஜி.கார்த்திகேயன், அறிக்கை தாக்கல் செய்தார்.
அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:இதுவரை, 63 சிலைகள் மற்றும் பொருட்களின் தொன்மை குறித்து, ஆய்வு நடந்துள்ளது.சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரத்தில் இருந்து, நிபுணர்களை வரவழைக்க வேண்டியுள்ளது. அதனாலும்,அதிக பணி இருப்பதாலும்,போதிய அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் கேள்வி அறிக்கையை பரிசீலித்த பின், விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.
இதற்கிடையில், அதிகாரி பொன் மாணிக்கவேலின் பதவி காலம் முடிவடைய உள்ளதால், அதை நீட்டிக்கக்கோரி, சென்னையை சேர்ந்த, ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு வந்தது.எந்த அடிப்படையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை நவம்பர்க்கு தள்ளி வைத்தனர்.