பதிவு செய்த நாள்
27
அக்
2018
11:10
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், கே.ஜி. கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், மூலவருக்கு பாலாபிஷேக உற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம்; காலை, 5:30 மணிக்கு, காகட ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில், சேஜ் ஆரத்தி நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.