பழநி அரசு மருத்துவமனை வளாகத்தில் விநாயகர்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2018 12:10
பழநி:பழநி அரசு மருத்துவமனை வளாகத்தில் 60 ஆண்டுகளாக உள்ள விநாயகர்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த பணிகள் நடக்கிறது. இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் விஸ்வஇந்துபரிசத், பா.ஜ., உள்ளிட்ட இந்துஅமைப்புகள் உடனடியாக கும்பா பிஷேகம் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். விஸ்வஇந்துபரிஷத் நகரத்தலைவர் ராமச்சந்திரன் குழுவினர் தலைமை மருத்துவர் விஜயசேகரிடம், ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கோரிக்கையை நிராகரித்து, விநாயகர்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மனுஅளித்துள்ள னர்.