திருப்போரூர் திருநிலையில், அகல் விளக்கு உற்பத்தி செய்யும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2018 01:11
திருப்போரூர்:திருநிலையில், கார்த்திகைத் தீபத்தை ஒட்டி, அகல் விளக்கு உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது.கார்த்திகைத் தீபத் திருநாள், இம்மாதம், 23ல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, வீடுகளில் விளக்கேற்ற பயன்படும், அகல் விளக்குகள் தயாரிப்பு சூடுபிடித்துள்ளது. திருப்போரூர் அடுத்த, திருநிலை கிராமத்தில் அகல் விளக்குகள் தயாரித்து விற்கும் தொழிலில், மும்முரமாக பலர் ஈடுபட்டுள்ளனர்.எனினும், மழை அவ்வப்போது குறுக்கிட்டு, காய வைக்கப்பட்டுள்ள மண் பொருட்களை, நனைக்கிறது.