பதிவு செய்த நாள்
26
நவ
2018
12:11
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், ஞானானந்தா நிகேதனில், நடந்த திருவாசக முற்றோதல் ஞானவேள்வியில் சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.திருக்கோவிலுார், ஞானானந்தா நிகேதனில், உலக நன்மைக்காக, திருவாசக முற்றோதல் ஞானபெருவேள்வி நடந்தது. ஞானானந்தா சத்சங்க மண்டபத்தில், ரிஷப வாகனத்தில், சிவபெருமான், அம்பிகையுடன், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் திருவுருவச்சிலைகள் நிறுவப்பட்டு வேள்வி துவங்கியது.நிகேதன் அறக்கட்டளை அறங்காவலர் நித்யானந்தகிரி சுவாமிகள் தலைமை தாங்கினார். சதாசிவகிரி சுவாமிகள், சமாநந்த சரஸ்வதி, பிரபவானந்த சரஸ்வதி, ஆத்மதத்வானந்த சரஸ்வதி, ஞான சிவானந்த சரஸ்வதி, அம்ருதேஸ்வரானந்தா சுவாமிகள் முன்னிலை வகித்தனர். கணபதி, சிவன், அம்பிகை, சூரியநாராயணன், லஷ்மிநாராயணன் ஆகியோருக்கு சிவ பஞ்சாயதன பூஜைகள் செய்து திருவாசக முற்றோதல் பெருவேள்வியை துவக்கி வைத்தனர்.திருச்சி சேக்கிழார் மன்றம், திருவாதவூரார் திருவாசக முற்றோதல் குழு, மணப்பாறை திருவாசகம் அன்பர்கள் குழு, சென்னை, தாம்பரம் கற்பக விநாயகர் திருநெறி மன்றம், கீழ் விஷாரம் அப்பர் சுவாமிகள் மடம் தேவார பயிற்சி மைய மாணவர்கள், கண்டாச்சிபுரம் திருவாசகம் முற்றோதல் குழு மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிவனடியார்கள் பலரும் வேள்வியில் பங்கேற்றனர்.காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை இடைவிடாது நடந்த வேள்வியில் அறக்கட்டளை அறங்காவலர்கள் பரமேஸ்வரன், சுவாமிநாதன், சுப்ரமணியன், வெங்கடேஷ், நாராயணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.