திண்டிவனம்: திண்டிவனம், திந்திரணீஸ்வரர் கோவிலில், காலபைவராஷ்டமி விழா நடந்தது. கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இதனை ருத்ராஷ்டமி, தேவாஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்வார்கள். இதையொட்டி, திண்டிவனம், திந்திரணீஸ்வரர் கோவிலிலுள்ள பைரவர் சன்னதியில் நேற்று காலை காலபைரவாஷ்டமி விழா நடந்தது. பைவரருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6.00 மணிக்கு காலபைவரருக்கு மகா தீபாராதனை நடந்தது.