நான்முகனின் படைப்புத் தொழிலை முருகப்பெருமான் சிறிது காலம் செய்துவந்தார். அப்போது அவர் நான்கு முகங்களுடன் பிரம்மவேலவனாகத் திகழந்தாராம். இப்படியான விசேஷ திருக்கோலத்தில் அருளும் முருகனை, திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி எனும் ஊரிலுள்ள கோயிலில் தரிசிக்கலாம். இந்த வேலவனை வணங்கி வழிபட்டால் நம் விதி நல்லபடியாக மாறும் என்பது நம்பிக்கை.