ராஜஸ்தானில் வேடுவ இன மக்கள் தீபாவளியன்று வீர விளையாட்டுகள் விளையாடுவார்கள். ஜெயின் மதத்தில் தீபாவளிக்கு எட்டு நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதம் கடைப்பிடிப்பார்கள். இதை ‘பர்யூசன் பர்வா’ என்று அழைக்கிறார்கள். இந்த விரதத்தின் போது அமைதியான இடத்தில் அமர்ந்து தியானம் செய்வார்கள். அப்போது காய்கறி உணவைத் தவிர்த்து சுடுநீரையே குடிப்பார்கள்.