கேரள மாநிலம், பாலக்காடு அருகிலுள்ள தேனாரி மத்யாரண்ய ஈசன் கோயிலில் சப்தமாதர் சன்னதி உள்ளது. வருடத்தில் ஒருநாள் தீபாவளியன்று மட்டுமே இதன் நடைக்கதவுகள் திறக்கப்படுகின்றன. அன்று சப்தமாதருக்கு அஷ்ட திரவிய அபிஷேகம், ரக்த புஷ்பாஞ்சலி, குங்குமார்ச்சனை போன்றவை வெகு விமரிசையாக நடக்கின்றன. அன்றைய தினம் இக்கோயிலைச் சார்ந்த 32 ஊர் மக்களும் திரளாக வந்து கலந்துகொள்கின்றனர்.