காசிக்கு அருந்தனா, சுதர்சனா, கேதுமதி, பூபவதி, ராம நகரா, மாளநி, காசிபுரா என்ற பெயர்கள் உண்டு. தவிர மச்சபுராணம் அவிமுக்தா க்ஷேத்திரம் என்றும், கூர்ம புராணம் மற்றும் காசி ரகசியம் ‘ஆனந்த வனம்’ என்றும் குறிப்பிடுகின்றன. இங்கு ஈசன் தங்கி அருள்வதால் ருத்ர வாசம் என்றும், ஞானம் வளர்க்கும் பூமி என்பதால் ஞான பூமி எனவும் கூறப்படுகிறது.