புதுச்சேரி: பட்டானுார் கிராமத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட சாய்பாபா உருவச்சிலைக்கு 108 பால் குட அபிஷேக விழா நாளை 16ம் தேதிநடக்கிறது.புதுச்சேரி அடுத்த புதுச்சேரி-திண்டிவனம் புறவழிச்சாலை பட்டானுார் கிராமத்தில், 6 அடி உயரமுடைய பழமை வாய்ந்த கருட கருங்கல்லால் ஆன சாய்பாபா உருவச்சிலை, வழிகாட்டும் சாய்பாபா என்ற பெயரில் பிரிதிஷ்டை செய்யப்பட்டது. இதன் 108 வது நாளை முன்னிட்டு, நாளை (16ம் தேதி) காலை 7 மணி முதல் 9.30 மணி வரை பாபாவிற்கு, 108 பால்குட அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆகையால் அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள், தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு கோவில் நிர்வாகியை 786702 27301 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.