Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொங்கல் தினத்தில் ராமேஸ்வரம் ... தை பொங்கல் விழா: கோயில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2019
01:01

சென்னை: தமிழகம் முழுவதும், நாளை காணும் பொங்கல் கொண்டாட உள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரை உள்பட சுற்றுலா தலங்களில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மாட்டு பொங்கலும், நாளை, காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. நாளை காணும் பொங்கல் நாளில், பொதுமக்கள், தங்கள் உறவினர் வீடுகள், பொது இடங்கள், சுற்றுலா தலங்களுக்கு சென்று, பொழுதுபோக்குவர்.சென்னையில், மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, வண்டலுார் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, அரசின் தொழில் பொருட்காட்சி, பொழுது போக்கு பூங்காக்கள், சினிமா தியேட்டர்கள் என, பல இடங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடுவர். மேலும், சர்க்கஸ் நிகழ்ச்சிகள், தனியார் இசை நிகழ்ச்சிகளிலும் மக்கள் கூடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு, அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுத்தல், சமூக விரோதிகளின் குற்ற செயல்களை தடுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மெரினா கடற்கரைக்கு, நாளை இரண்டு லட்சம் பேரும், எலியட்ஸ் கடற்கரைக்கு, 50 ஆயிரம் பேரும், செல்ல வாய்ப்புள்ளது. அதனால், 20 ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. குதிரை படை, கடற்கரை ரோந்து வாகனம் போன்றவற்றிலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இதேபோல், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, சேலம், உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், சுற்றுலா தலங்கள், அருவிகள், ஆறுகளின் குளிக்கும் பகுதிகள், விளையாட்டு மற்றும் சிறுவர் பூங்காக்களில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஆள் இல்லா குட்டி விமானம் வழியாக, கேமரா பொருத்தி கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வெள்ளைக்கிணறுவில் உள்ள பூ மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அடி அளந்து ... மேலும்
 
temple news
கருமததம்பட்டி; கே.ராயர்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவின்தேர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar