Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாளை காணும் பொங்கல் ... திருப்பூர் கோவிலில் வழிபாடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை பொங்கல் விழா: கோயில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2019
01:01

தேனி:தேனி தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பெரியகுளம் ரோடு பெத்தாட்சி விநாயகர் கோயில், வேல்முருகன் கோயில், என்.ஆர்.டி., நகர் கணேச கந்த பெருமாள் கோயில், அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயில், வீரப்ப அய்யனார் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில்களில் சிறப்பு பூஜை, அலங்கார அபிஷேகங்கள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

போடி:* தைப்பொங்கலை முன்னிட்டு, போடி சீனிவாச பெருமாள் கோயிலில் ஸ்ரீ தேவி, பூமிதேவியுடன் சீனிவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருளாசி பெற்றனர். ஏற்பாடுகளை தக்கார் பாலகிருஷ்ணன், சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியர் செய்திருந்தார்.

* போடி சுப்பிரமணிய சுவாமி கோயில், புதுார் சங்கடகர விநாயகர் கோயில், அக்ரஹாரம் பாலவிநாயகர் கோயிலில் விநாயகர், ஐய்யப்பன் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தன.

* போடி அருகே பிச்சாங்கரை ஸ்ரீ கயிலாய கீழச்சொக்கநாதர், மேலச்சொக்கநாதர், தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் பரமசிவன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.

* போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், சுப்பிரமணியர் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில்களில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.* பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் பால சுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

* வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

* கம்பம்ரோடு காளியம்மன் கோயில், குருவப்ப பிள்ளையார் கோயில், கைலாசபட்டி, கைலாசநாதர் மலைக் கோயில், ஷீரடி சாய்பாபா கோயில், பாம்பாற்று பக்த ஆஞ்சநேயர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும், தாமரைக்குளம் வெங்கிடாஜலபதி கோயில்,லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றுச் சென்றனர்.

* நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணனர், ராதைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. பொங்கல் வைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar