Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி ... நாளை காணும் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொங்கல் தினத்தில் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2019
01:01

ராமேஸ்வரம்: பொங்கல் விழா யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று பொங்கல் திருநாள் யொட்டி, அதிகாலை 3:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலில் நடை திறந்து, காலை 4 முதல் 5 மணி வரை சுவாமி சன்னதியில் ஸ்படிகலிங்க பூஜை நடந்தது.


இதனைதொடர்ந்து கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் பொங்கல் திருநாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயிலுக்குள் 22 தீர்த்தங்களை நீராடினர். பின் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் மேலாளர் சுந்தரவாத்தியார், பஜ்ரங்கதாஸ் பாபா சேவா மடத்தில் சீதாராம்தாஸ்பாபா ஏராளமான பக்தருக்கு இனிப்பு பொங்கல் வழங்கினர்.

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயில் சன்னதியில் உள்ள பட்டாபிஷேக ராமர், தர்ப்ப சயன ராமர், கல்யாண ஜெகநாதப்பெருமாள் ஆகியோருக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது.
* உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பொங்கல் வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.மஞ்ச மாதாவிற்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் நடந்தது.உலகநன்மைக்கான கூட்டுவழிபாடு நடந்தது.
* சாயல்குடி கைலாசநாதர் சமேத மீனாட்சியம்மன் கோயிலில் பொங்கலை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
* சிக்கல் அருகே கொத்தங்குளம் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேத சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் பொங்கலை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
* சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பொங்கலிட்டு வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.அருகம்பாளையத்தில், ... மேலும்
 
temple news
 சென்னை: கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருநட்சத்திர நாளை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு, 1,008 ... மேலும்
 
temple news
பழநி: பழநி ரெணகாளிஅம்மன் கோயில் ஏப்.30 கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்த கால் ... மேலும்
 
temple news
 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை என்பதால், சுட்டெரிக்கும் வெயிலிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar