Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மொண்டிபாளையம், பெருமாள் கோவில் ... கோட்டைபாளையத்தில் ஜோதி தரிசன விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுவர்களின் சிலிர்ப்புமிக்க காவடி ஆட்டம்: சென்னிமலை நோக்கி பாதயாத்திரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2019
03:01

கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி அருகில், கணியூர் ஊராட்சியில் உள்ளது ஊஞ்சப்பாளையம் கிராமம். இங்கிருந்து ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவிற்கு, ஒரு பகுதியினர் பழநிக்கும், மீதிப்பேர் சென்னிமலை முருகன் கோவிலுக்கும் காவடி எடுத்து ஆடியபடி பாதயாத்திரை செல்வது வழக்கம்.

நூறாண்டாகத் தொடரும் இந்த பாரம்பரியப்படி, நேற்று முன்தினம் (ஜன., 19ல்) ஊஞ்சப் பாளையத்திலிருந்து, கந்தசாமி அய்யன் குடும்பத்தை சேர்ந்த பெரியகாவடி முன்செல்ல, பாதயாத்திரை குழுவினர் அணிவகுத்தனர்.

கடும் விரதமிருந்து, கால்கள் நோகாமல் இருப்பதற்காக வழிநடைப் பாடல்களைப் பாடியபாடி, காவடி எடுத்து ஆடிப்பாடி நூற்றுக்கணக்கானோர் சோமனூர், வாழைத்தோட்டத்து அய்யன் கோவில், மங்கலம் வழியாக சென்றனர்.இந்த பாதயாத்திரை பக்தர்கள் குழுவில் டம்பெற்ற சிறுவர்கள், சோமனூர் பவர்ஹவுஸ் முன், காவடிச்சிந்து பாடல்களைப் பாடியபடி ஆடிய காவடி ஆட்டம் காண்போரை வெகுவாகக் கவர்ந்தது.

இவர்கள் (ஜன., 20ல்) நேற்று மாலை சென்னிமலையை அடைந்தனர். அங்கு சிரகிரிவேலவன் சன்னதியில் காவடிகளை செலுத்தினர். இன்று (ஜன., 21ல்) தைப்பூசத்திருவிழாவில் பங்கேற்ற பின், ஊர் திரும்புவர்.கருமத்தம்பட்டி சோமனூர் பகுதியில் மோளகாளிபாளையம், வலைய பாளையம், மாதப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து தைப்பூசத்திருவிழா விற்காக, பழநிக்கும், சென்னிமலைக்கும் கடந்த மூன்று நாட்களாக சாரிசாரியாக பக்தர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு,பெருவுடயாருக்கு ஆயிரம் கிலோ அரிசி மற்றும் 500 ... மேலும்
 
temple news
அரியலூர் ; கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த  அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் வெகு ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar