தை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதி, ரத சப்தமியாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி தீபமேற்றி சூரிய வழிபாடு செய்து, தானதர்ம செய்வது சிறந்தது. இதனால் ஆரோக்கியம், நோயின்மை, செல்வம், புத்திரப்பேறு, நீண்ட ஆயுள், பகைவர்களை வெல்லும் திறன், வெற்றி, ஆகியவை கிட்டுவதுடன் புண்ணியம் பெருகும். மனக்கவலை, வியாதி தீரும். குழப்பம் நீங்கி நல்வழி பிறக்கும்.