Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓமலூர் வந்த ஆதியோகி ரதம் வாலாஜாபேட்டையில் நெல்லிப்பொடி ஓம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவலூர்பேட்டையில் கோவிலை இடிக்க எதிர்ப்பு திரும்பிச் சென்ற அதிகாரிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2019
01:02

அவலூர்பேட்டை:வளத்தியில் சாலையை அகலப்படுத்த பிள்ளையார் கோவிலை இடிக்க நெடுஞ்சாலை துறையினர் வந்ததால் பரபரப்பு நிலவியது.மேல்மலையனூர் அடுத்த
வளத்தியில் செஞ்சி, ஆற்காடு, மேல்மலையனூர் சாலைகள் சந்திப்பு இடத்தில் 150 ஆண்டு களுக்கும் மேலான இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஓட்டு கட்டடத்திலான ஏழைப் பிள்ளையார் கோவில் உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறையின் சார்பில் சாலை மேம்பாட்டு திட்ட பணிகள் நடந்து வருகிறது. சாலை அகலப்படுத்துவதற்காக, கோவிலை அப்புறப்படுத்த வேண்டும் எனக்கூறி மாநில நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ்
வழங்கினர். இதை தொடர்ந்து நேற்று காலை 11:30 மணிக்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட உதவி பொறியாளர் பிரபுராஜன், பணியாளர்களுடன் கோவிலை இடித்து அகற்ற
வந்தார்.

இதனையறிந்த தி.மு.க., ஒன்றிய செயலர் நெடுஞ்செழியன், வன்னியர் சங்க மாநில துணை அமைப்பாளர் ராஜேந்திரன், வி.சி., மாநில அமைப்பாளர் துரைவளவன், மா.கம்யூ.,கிளைச் செயலாளர் விஜயகுமார் மற்றும் கிராம மக்கள் அங்கு திரண்டு பணியை தடுத்து நிறுத்தினர்.
தகவலறிந்து வந்த வளத்தி இன்ஸ்பெக்டர் குமரபாலன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இந்த சாலை அருகிலேயே கோவில் கட்ட இடம் மற்றும் கோவிலைக் கட்ட 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை மேலிடத் திற்கு தெரிவிப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar