Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லடம் சிவாலய பக்தி ... கள்ளக்குறிச்சி மந்தைவெளி திரவுபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

06 மார்
2019
02:03

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், மகா சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழாவையொட்டி, நேற்று முன்தினம் (மார்ச்., 4ல்) மாலை, 6:30 மணிக்கு மங்கள இசை, விநாயகர் பூஜை, 108 சங்குகள் ஆவாகனம், கலச பூஜை, மூலமந்திர ஹோமம், முதல் கால பூர்ணாகுதி பூஜைகளும் நடைபெற்றன.

தொடர்ந்து நான்கு கால வழிபாடும், ஹோம பூர்ணாகுதி, கலச அபிஷேகம் வழிபாடு நடந்தது.கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில், மங்கள இசையுடன் சிவராத்திரி விழா துவங்கியது. அனுக்கிரக, விக்னேஸ்வரர், கணபதி ஹோமம், அன்னதானம் நடந்தது. இரவு, கரப்பாடி இளைஞரணியின் தேவராட்டமும், நான்கு கால அபிஷேக பூஜை நடந்தது. காலை, 5:00 மணிக்கு ஆனைமலை உலக நல வேள்வி குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

குரும்பபாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், சிவராத்திரியை யொட்டி, நான்கு கால யாக பூஜைகளும்; நேற்று (மார்ச்., 5ல்) காலை, அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியும் நடந்தது.குள்ளக்காபாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், நெல்லுக்குப்பம்மன் கோவிலில், சக்தி அழைத்தல், சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடந்தது. இரவு முழுவதும் சிறப்பு கால வழிபாடு நடந்தது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சிவன் கோவில்களில், மகா சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.

* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில்,மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில், எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில், நேற்றுமுன் தினம் (மார்ச்., 4ல்) மாலை, 6:00 மணிக்கு, 16 வகையான அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.கோவிலில் இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டனர். இரவு முழுவதும் பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடினர். அதிகாலை, 4:00 மணிக்கு சிவனுக்கு அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar