Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லடம் சிவாலய பக்தி ... கள்ளக்குறிச்சி மந்தைவெளி திரவுபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

06 மார்
2019
02:03

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், மகா சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழாவையொட்டி, நேற்று முன்தினம் (மார்ச்., 4ல்) மாலை, 6:30 மணிக்கு மங்கள இசை, விநாயகர் பூஜை, 108 சங்குகள் ஆவாகனம், கலச பூஜை, மூலமந்திர ஹோமம், முதல் கால பூர்ணாகுதி பூஜைகளும் நடைபெற்றன.

தொடர்ந்து நான்கு கால வழிபாடும், ஹோம பூர்ணாகுதி, கலச அபிஷேகம் வழிபாடு நடந்தது.கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில், மங்கள இசையுடன் சிவராத்திரி விழா துவங்கியது. அனுக்கிரக, விக்னேஸ்வரர், கணபதி ஹோமம், அன்னதானம் நடந்தது. இரவு, கரப்பாடி இளைஞரணியின் தேவராட்டமும், நான்கு கால அபிஷேக பூஜை நடந்தது. காலை, 5:00 மணிக்கு ஆனைமலை உலக நல வேள்வி குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

குரும்பபாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், சிவராத்திரியை யொட்டி, நான்கு கால யாக பூஜைகளும்; நேற்று (மார்ச்., 5ல்) காலை, அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியும் நடந்தது.குள்ளக்காபாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், நெல்லுக்குப்பம்மன் கோவிலில், சக்தி அழைத்தல், சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடந்தது. இரவு முழுவதும் சிறப்பு கால வழிபாடு நடந்தது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சிவன் கோவில்களில், மகா சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.

* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில்,மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில், எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில், நேற்றுமுன் தினம் (மார்ச்., 4ல்) மாலை, 6:00 மணிக்கு, 16 வகையான அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.கோவிலில் இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டனர். இரவு முழுவதும் பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடினர். அதிகாலை, 4:00 மணிக்கு சிவனுக்கு அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar