பதிவு செய்த நாள்
01
மார்
2012
04:03
கும்பகோணம் கும்பேஸ்வரர் மீது திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்களை, மாசி மகத்தன்று (மார்ச்7) பக்தியுடன் படித்தால், மகாமகக்குளத்தில் நீராடிய புண்ணிய பலன் கிடைக்கும்.
பூவணத்தவன் புண்ணியன் நண்ணியங்கு
ஆவணத் துடையான் அடியார்களைத்
தீவணத் திருநீறு மெய் பூசியோர்
கோவணத்துடையான் குட மூக்கிலே.
பூத்தாடிக் கழியாதே நீர் பூமியீர்
தீத்தாடித் திறஞ் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்தாடுங் காளிதன் விசை தீர்கென்று
கூத்தாடி உறையும் குட மூக்கிலே.
நங்கையாள் உமையாள் உறைநாதனார்
அங்கையாளொடு அறுபதம் தாழ்சடைக்
கங்கையாள் அவள் கன்னி எனப்படும்
கொங்கையாள் உறையும் குட மூக்கிலே.
ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல்
ஏதானும் இனிதாகும் மியமுனை
சேதா ஏறுடையான் அமர்ந்த இடம்
கோதாவிரி உறையும் குடமூக்கிலே.
நக்கரையனை நாள்தொறும் நன்னெஞ்சே
வக்கரை உறைவானை வணங்கு நீ
அக்கரையோடு அரவரை ஆர்த்தவன்
கொக்கரை யுடையான் குடயான் குடமூக்கிலே.
துறவி நெஞ்சினராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டஎம்
குறவனார் உறையும் குடமூக்கிலே.
தொண்டராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்டவர்புரம் மூன்றொரு மாத்திரைக்
கொண்டவன் உறையும் குடமூக்கிலே.
காமியம் செய்து காலம் கழியாதே
ஓமியம் செய்தங்கு உள்ளத்து உணர்மினோ
சாமியோடு சரச்சுவதி அவள்
கோமியும் உறையும் குடமூக்கிலே.
சிரமம் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்
பரமனைப் பல நாளும் பயிற்றுமின்
பிரமன் மாலொடு மற்றொழிந் தார்க்கெலாம்
குரவனார் உறையும் குட மூக்கிலே.
அன்று தானரக்கன் கயிலாயத்தைச்
சென்று தானெடுக்க உமை அஞ்சலும்
நன்று தான் நக்கு நல்விரல் ஊன்றிப்பின்
கொன்று கீதங்கேட்டான் குடமூக்கிலே.