பதிவு செய்த நாள்
23
மார்
2019
02:03
அன்னூர் : அன்னூர், மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நாளை (மார்ச்., 24ல்) நடக்கிறது.
அன்னூர் தென்னம்பாளையம் ரோட்டில், 50 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து, 14 ஆண்டுகளாகி விட்டது. இதையடுத்து, கோபுரத்தில் சுதை வேலைப்பாடு செய்து, வர்ணம் தீட்டி, முன்மண்டபம் கட்டி, பளிங்கு கற்களால் தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழா நேற்று (மார்ச்., 22ல்) துவங்கியது.நேற்று (மார்ச்., 22ல்) காலையில், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தீர்த்த குடம் எடுத்து வருதல் நடந்தது. மாலையில், முதற்கால வேள்வி பூஜை நடந்தது. இன்று (மார்ச்., 23ல்) காலையில், இரண்டாம் கால வேள்வி, மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜைகள், எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது.
நாளை (மார்ச்., 24ல்) காலை 7:15 மணிக்கு விமானத்திற்கும், மாரியம்மனுக்கும் கும்பாபிே ஷகம் நடக்கிறது.பின்னர் அலங்கார பூஜை, தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.