Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட ... மணப்பள்ளி முனியப்பன் ஸ்வாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகம்மாள் கோவில் வளைகாப்பு திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2012
11:03

ராசிபுரம்: நாகம்மாள் கோவிலில் நடந்த வளைகாப்பு திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் அருகில் நாகம்மாள், அங்காளபரமேஸ்வரி, சமயபுரத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஸ்வாமிக்கு வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு 8ம் ஆண்டாக விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 28ம் தேதி இரவு 11 மணிக்கு சமயபுரத்து மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல், சிறப்பு அபிஷேகம், ஆராதனையுடன் விழா துவங்கியது. அதை தொடர்ந்து, இரண்டு நாட்கள் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.நேற்று காலை 8 மணிக்கு, நெசவாளர் காலனியில் இருந்து பெண்கள் பால்குடம் எடுத்தும், அக்னிச்சட்டி ஏந்தியும், முளைப்பாரி, தீர்த்தகுடம் எடுத்துக் கொண்டு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.அன்று பகல் 12 மணிக்கு, நாகம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெண்கள் புற்றுக்கு மஞ்சள் குங்குமம் வைத்தும், வளையல் அணிவித்தனர். அதை தொடர்ந்து, நலுங்கு வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. தொட்டில் கட்டி வளையல், எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை வைத்து தாலாட்டு பாடினர்.குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், தொட்டிலை ஆட்டி தங்கள் வேண்டுதல் நிறைவேற்றினர். மேலும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டி, பெண்கள் மடிச்சோறு வாங்கி சாப்பிட்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar