பிரபலங்களின் பிள்ளைகள், சட்ட ஒழுங்குகளை மீறும் போது அவர்களை ஒன்றும் செய்ய முடிவிதில்லை. காரணம் அவருடைய தகப்பனாருக்குரிய மரியாதைக்காக! இதனால், இவர்களுடைய பிள்ளைகள் காப்பாற்றப்படுகின்றனர். சிலர், “என் எப்பா பெயரை சொன்னாலே ஊர் ஜனங்களெல்லாரும் கை கட்டி நிற்பார்கள்,” என்று பெருமையாக பேசுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு கேள்வி ‘‘நீங்கள் என்றாவது பரலோகத்தின் தகப்பனாகிய நம் இயேசு என்கிற அப்பாவை நினைத்து பெருமைப்பட்டதுண்டா..... அவர் தான் நம்மை உருவாக்கினவர். அவருடைய நாமம் அதிசயம், வல்லமையுள்ள இயேசப்பாவை உங்கள் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள், அவருக்கு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் நாமத்தை நாம் உச்சரிக்கும் போது பிசாசுகள் அலறும். ஆம்! அவர் நம் தந்தை, நாம் அவர் பிள்ளைகள், எவ்வளவு பெரிய பாக்கியம் இது!! இதைச் சொல்லி பெருமைப்படுங்கள்.பரமன்குறிச்சி பெ.பெவிஸ்டன்