Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

குன்னூர் பகவதியம்மன் கோவிலில், ... கொடுமுடி வெற்றிவேல் முருகன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2019
03:04

ஈரோடு: ஈரோடு, பெரியமாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பு வழி கட்டணத்தில், 10 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது.

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், பொங்கல், குண்டம் தேர்த்திருவிழா, மார்ச், 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கி, ஏப்., 6ல் கம்பம் பிடுங்கும் விழாவுடன் நிறைவு பெற்றது. கம்பம்
நடப்பட்ட நாள் முதல், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், வரிசையில் நின்று கம்பத்துக்கு தீர்த்தம் ஊற்றி வழிபட்டு வந்தனர். அக்னி சட்டி, அலகு, தீர்த்தம் என, கோவில் வளாகத்தில் நிற்க கூட இடமில்லாமல் நெருக்கடி ஏற்பட்டது.

முதியவர்கள், குழந்தைகளுடன் வருவோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர், வரிசையில் நின்று செல்ல முடியாதவர்களுக்காக, கட்டண சிறப்பு வழி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மூலம், 25 ரூபாய் கட்டணத்தில், ஐந்து லட்சத்து, 42 ஆயிரத்து, 825 ரூபாய், 50 ரூபாய் கட்டண வழியில், நான்கு லட்சத்து, 64 ஆயிரத்து, 506 ரூபாய் என, மொத்தம், 10 லட்சத்து, 7,320 ரூபாய் வசூலாகியுள்ளது.

இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன் கூறியதாவது: ஈரோடு பெரியமாரியம் மன் கோவில் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து சென்றுள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்குநாள் அதிகமாகி வந்ததால், தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க முடியவில்லை. குறிப்பாக,
பொங்கல் வைக்க இடமில்லை, வாகனங்கள் நிறுத்த இடமில்லை, முடிகாணிக்கை செலுத்த இடமில்லை, முடிகாணிக்கை செலுத்தியோர் குளிக்க இடமில்லை. கழிவறை வசதியில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம், அறநிலையத்துறையின் கவனத்துக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது. விரைவில் இட வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar