பாவம் தான். நெல், காய்கறிகள், பழங்கள் போன்றவை முளைப்பு திறன் கொண்டதால் உயிருள்ளவை தான். ஆனால் நாம் உயிர் வாழ சாப்பிடுவது அவசியம். இதே போல ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஈ, கொசு போன்ற பூச்சிகள், கிருமிகளைக் கொல்வதை தவிர்க்க இயலாது. இதற்கு பரிகாரமாக குளிக்கும் முன் கங்காதேவியை பிரார்த்தித்தால் இந்த பாவம் அகலும்.