மகிமைமிக்க மாருதி தலங்களுள் ஒன்று, ஆந்திராவிலுள்ள காசாபுரம். இந்தக் கிராமத்தில் கோயில் கொண்டுள்ள நெட்டிகண்டி ஆஞ்சநேயர் மிகவும் வரப்பிரசாதி. ஒருசமயம் பக்தர் ஒருவர் கனவில் தோன்றி, தனக்குப் பாதுகைகள் செய்து கோயிலில் வைக்குமாறு கூறினாராம். அவ்வாறே அவர் செய்து வைக்க, அந்தப் பாதுகைகளை ஆஞ்சநேயர் அணிந்து நடந்த தடங்கள் மறுநாள் தெரிந்ததாம். அன்று முதல் ஆஞ்சநேயருக்கு புதிய செருப்புகளை தலையில் சுமந்து வந்து அர்ப்பணித்து வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறுவதை அவர்கள் உணரத் தொடங்கினர். இந்தக் கோயிலில் சனிக்கிழமை இரவு வழிபடுவது சிறப்பு. தொடர்ந்து பதினெட்டு நாட்கள் நெட்டிகண்டரை தரிசித்து வழிபடுவோருக்கு நோய் நொடிகள் குணமாகும் என்பது நம்பிக்கை.