பதிவு செய்த நாள்
17
ஏப்
2019
03:04
தர்மபுரி: தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் உள்ள முனியப்பன் கோவிலில், கண் திறப்பு மற்றும் முப்பூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த, 14ல், காலை, 10:00 மணிக்கு, கொடியேற்றம் மற்றும் கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, கங்கணம் கட்டிக் கொண்டனர். நேற்று முன்தினம் (ஏப்., 15ல்) காலை, 10:30 மணிக்கு, நூலஹள்ளி திரௌபதியம்மன் கோவிலுக்கு சென்று, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அன்று இரவு, 10:00 மணிக்கு,
தெருக்கூத்து கலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று (ஏப்., 16ல்) காலை, 8:00 மணிக்கு, கரகம் அழைப்பு, 9:00 மணிக்கு முப்பூஜையும் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, முனியப்ப சுவாமிக்கு கண் திறப்பு விழா நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகள், முனியப்ப சுவாமிக்கு பலி கொடுக்கப்பட்டது. இன்று (ஏப்., 17ல்) காலை, 10:00 மணிக்கு மேல், சுவாமிக்கு மறுபூஜை செய்யப்பட உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.