புதுச்சேரி: வன்னியப் பெருமாள் கோவிலில், சித்திரை மாத தேரோட்டம், வரும் 1ம் தேதி நடக்கிறது.முதலியார்பேட்டை வன்னியப் பெருமாள் கோவிலில் சித்திரை பிரமோற்சவ விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, அன்று காலை பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.முக்கிய உற்சவமான தேரோட்டம், வரும் 1ம் தேதி காலை 9.15 மணிக்கு நடக்கிறது. அன்று மாலை 6.00 மணிக்கு கோபுர வாயிலில் தீர்த்தவாரி நடக்கிறது. பிரமோற்சவ விழா நாட்களில் தினமும் காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனமும், மாலையில் சுவாமி வீதியுலா நடக்கிறது.