பதிவு செய்த நாள்
27
ஏப்
2019
02:04
திருத்தணி : முருகன் கோவில் உண்டியலில், 14 நாட்களில், 75.48 லட்சம் ரூபாய், 825 கிராம் தங்கத்தை, பக்தர்கள், காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசிக்கின்றனர்.
காணிக்கையாக, பணம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை, மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்துகின்றனர்.அந்த வகையில், கடந்த, 14 நாட்களில், உண்டியலில் செலுத்திய பக்தர்களின் காணிக்கை, கோவில் தக்கார் ஜெய்சங்கர் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்களால் எண்ணப்பட்டது.
இதில், 75.48 லட்சம் ரூபாய், 825 கிராம் தங்கம், 5,150 கிராம் வெள்ளி ஆகியவை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.