Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவலோகநாதர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2019
11:05

மயிலாடுதுறை: சீர்காழி அருகே திருப்புன்கூரில் அமைந்துள்ள சிவலோகநாதர் சுவாமி கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

Default Image
Next News

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருப்புன்கூரில் சௌந்திரநாயகி அம்பாள் உடனாகிய சிவலோகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகியவை ஒருங்கே அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பாடல் பெற்றதும், நந்தனாருக்காக நந்தி விலகி தரிசனம் அளித்த தலமான இங்கு பிரம்மா, இந்திரன், சூரியன், அகஸ்தியர், சுவாமியை பூஜித்து சாபம்,பாவம் நீங்க பெற்றுள்ளனர். இந்த கோவிலில் மழை பெய்யவும், நிற்கவும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவார பதிகம் பாட மழை பெய்தும் பின்னர் நின்றும் நாடுசெழித்தது. அதற்கு மானியமாக 24வேலி நிலத்தை சோழ மன்னர் கோவிலுக்கு வழங்கியுள்ளார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் நேற்று இந்து சமய அறநிலையதுறை உத்தரவின்படி மழை வேண்டி ருத்ர யாகம் மற்றும் வருண ஜபம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மகாமண்டபத்தில் 22 கலசங்களி ல் புனித நீர் வைக்கப்பட்டு ருத்ர ஹோமம், ருத்ர ஜபம், ருத்ர பூஜை, வருண ஜபம் மற்றும் ருத்ர அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு வேதோ உபசாரம், திருமுறை பாராய ணம், நாதோ உபசாரம், நாட்டிய உபசாரம் நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்திதேவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபா ராதனை நடைபெற்றது. அதனையடுத்து நந்திதேவரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தோட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தன ர். யாகம் மற்றும் பூஜைகள் கோவில் அர்ச்சகர் பாலாஜி, செதலபதி, சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் அவரது சீடர்கள் செய்துவைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகாதேவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar