பதிவு செய்த நாள்
03
மே
2019
02:05
குளித்தலை: குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில் நேற்று 2ல், மாலை, 5:00 மணியளவில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், நெய், இளநீர்,
தேன் போன் வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. இதேபோல், பெரிய பாலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர்,
மேட்டுமருதூர் ஆரா அமுதீஸ்வரர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சிவாயலங்களில் உள்ள நந்தீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
* கரூர்: கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
பின் திராட்சை, சாத்துக்குடி, எலுமிச்சை உள்ளிட்டவை மற்றும் மல்லிகை, செவ்வந்தி, ரோஜா, அரளி உள்ளிட்ட பூக்களை கொண்டு மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டனர்.