பதிவு செய்த நாள்
25
மே
2019
02:05
திருப்பூர்:திருப்பூர் விஸ்வேஸ்வரர் - வீரராகவப் பெருமாள் கோவில்களின் தேர்த்திருவிழா நேற்று (மே., 24ல்) விடையாற்றி உற்சவத்துடன் நிறைவடைந்தது.திருப்பூரின் பிரசித்தி பெற்ற
விஸ்வேஸ்வரர்- வீரராகவப் பெருமாள் ஆகிய கோவில்களின் வைகாசி விசாக தேர்த் திருவிழா கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.18ம் தேதி விஸ்வேஸ்வரர்
கோவில் மற்றும், 19ம் தேதி, வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டமும் நடந்தது.நேற்று தேர்த்திருவிழா நிறைவாக, விடையாற்றி உற்சவம் நடந்தது. சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும், கால பைரவருக்கு சிறப்பு பூஜையும் நடந்தது.நேற்று (மே., 24ல்) மாலை, பெருமாள் கோவில் வளாகத்தில், பட்டி மன்றம் நடந்தது. தங்கவேல் நடுவராக
பங்கேற்ற, பக்தி மார்க்கம் மக்கள் வாழ்வை சீர்படுத்துகிறதா? சிரமப்படுத்துகிறதா? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது.
கண்ணன், பாலகிருஷ்ணன், கலாவதி மற்றும் கலைவாணி ஆகியோர் பேசினர். பட்டிமன்ற முடிவில், சீர்படுத்துகிறது என, தங்கவேல் தீர்ப்பளித்தார்.