பதிவு செய்த நாள்
25
மே
2019
02:05
கோவை:பாலக்காடு ரோடு, குனியமுத்தூரில் அமைந்துள்ளது, அறம் வளர்த்த மாரியம்மன் கோவில். இக்கோவிலின் உற்சவத்திருவிழா, கடந்த, 14ம் தேதி துவங்கியது.இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டோம் நடந்தது.
திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு தினமும் காலை, மதியம், இரவு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் (மே., 23ல்) மாலை, குனியமுத்தூரில் உள்ள முக்கிய வீதிகளில், மாரியம்மன் தேர் வலம் வந்தது. நேற்று (மே., 24ல்) மாலை, திருவிழா மறுபூஜையும், ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இன்று மே., 25ல்) குனியமுத்தூர் ரைஸ் மில் ரோடு மைதானத்தில், இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.